“நான் விடைபெறுகிறேன்” – அர்ச்சுனா எம்.பி. பதவி விலகுவதாக அறிவிப்பு
யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தாம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யவுள்ளதாக பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தனது பதவிக்காலம் விரைவில் நிறைவடையவுள்ளதாகவும், பாராளுமன்றத்தில் இனியும் நீண்ட காலம் இருக்கப்போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
“நான் விடைபெறுகிறேன்” எனத் தெரிவித்த அர்ச்சுனா எம்.பி., தாம் விரைவில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.

