மகாத்மா காந்தியின் 153 ஆவது ஜனனதினத்தை முன்னிட்டு துவிச்சக்கரவண்டிப் பயண ஊர்வலம்

யாழ். இந்தியத் தூதரகத்தின் எற்பாட்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்த மகாத்மா காந்தியின் 153 ஆவது ஜனனதினத்தை எதிர்வரும் 02.10.2022 அன்று நினைவுகூரும் முகமாக இன்று துவிச்சக்கரவண்டிப் பயண ஊர்வலம் யாழ்ப்பாணத்திலுள்ள காந்தி சிலையடியிருந்து வட்டுக்கோட்டை கல்லூரி வரை இடம்பெற்றது. இவ் துவிச்சக்கரவண்டிப்பயண ஊர்வலம் யாழ்.... Read more »

சிகிச்சைக்கு செல்லும் போதை பொருள் பாவனையாளர்கள் குறித்து எழுந்துள்ள சிக்கல்!

உயிர்கொல்லி போதைப்பொருட்களான ஹெரோய்ன் போன்ற போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் தாங்களாக சிகிச்சைக்கு முன்வருவது கடந்த அண்மைய நாட்களில் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுக்கான புனர்வாழ்வு விடுதி வசதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட மருத்துவமனைகளில் இல்லாத நிலையில், அவர்களுக்கு உளவள ஆலோசனைகளும், மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்படுகின்றன... Read more »
Ad Widget Ad Widget

நாட்டில் படிப்படியாக குறையும் தங்கத்தின் விலை!

வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது. இந்த நிலையில், உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி... Read more »

ஜனாதிபதி நாட்டிற்கு கொண்டு வரும் மற்றுமோர் நல திட்டம்

உலகில் எந்தவொரு நாட்டு மாணவர்களும் கல்வி கற்கக் கூடிய வகையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகமொன்றை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையுடன் இலங்கையில் ஸ்தாபிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை ஒன்றை முன்மொழிந்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின்... Read more »

மீண்டும் மக்கள் புரட்சி ஒன்று ஏற்ப்படும் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

அக்டோபர் மாத இறுதியின் பின்னர் நாட்டுக்குள் மிகப் பெரிய மக்கள் புரட்சி ஆரம்பமாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவின் தலைவியுமான ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். தலங்கமை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பாடசாலை மாணவர்களின் போஷாக்கு வேலைத்திட்டம் ஒன்றின்... Read more »

மலையகத்தில் இரு ஆண்களின் சடலம் மீட்பு!

மலையகத்தில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுவரெலியா மாவட்டம் வலப்பனை, குருந்து ஓயா பகுதியில் இந்த சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மர்மமான நிலையில் குறித்த நபர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் சம்பவம்... Read more »

யாழில் இனம் தெரியாத நபர்கள் தாக்குதல்!

யாழ்.வண்ணார்பண்ணைப் பகுதியில் நான்கு வீடுகள் மீது இனம் தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்பில் மேலும் தெரியவருகையில், வண்ணார்பண்ணைப்பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு நவராத்திரியை முன்னிட்டு ஆலயத்துக்காகக் கட்டப்பட்டிருந்த மின் விளக்குகளை மதுபோதையில் சென்ற இருவர் உடைத்துள்ளனர். இளைஞர்கள் எச்சரிக்கை இந்நிலையில் பிரதேச இளைஞர்கள் அவர்களை... Read more »

ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட வயோதிப பெண் ஒருவர்

வயோதிபப் பெண் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கிடைக்கப்பெற்ற தகவலின் படி கொழும்பு 15, புளூமண்டல் வீதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐஸ் போதைப்பொருளுடன் கைது ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பெண் மாதம்பிட்டிய வீதி,... Read more »

லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி!

எரிவாயு விநியோகத்தை தடை இன்றி மேற்கொள்வதற்காக உலக வங்கியினால் கிடைத்த கடன் தொகையில் ஒரு பகுதியை திறைசேறிக்கு செலுத்த முடிந்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் முழு கடன் தொகையையும் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் திறைசேரிக்கு செலுத்தப்படும் என்று அதன் தலைவர் முதித... Read more »

மின்வெட்டு குறித்து வெளியாகியுள்ள மகிழ்ச்சியான செய்தி!

கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தேவையான உலை எண்ணெய் கையிருப்பு வழங்கப்பட்டதன் பின்னர் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயற்பாடுகளை மீளவும் ஆரம்பித்துள்ளது. இதனூடாக தேசிய மின் தொகுப்பில் 300 மெகாவாட் மின்சாரம் சேர்க்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. கெரவலப்பிட்டி... Read more »