கால்நடைத் துறையில் நோய்களைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய நடவடிக்கை
இலங்கையின் கால்நடைத் துறையில் பரவி வரும் கால்–வாய் நோய் மற்றும் தோல் கட்டி நோய் போன்ற தொற்று நோய்களைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் முறையான தடுப்பூசி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கமத்தொழில் அமைச்சும் உலக வங்கியின் ஆதரவுடன் இந்தத் தடுப்பூசி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனுடன், 2026–2030 தேசிய பால் உற்பத்தித் திட்டத்தின் கீழ் உள்நாட்டு பால் உற்பத்தியை மூன்று மடங்காக அதிகரிப்பதும், பால் உற்பத்தியாளர்களை தொழில்முனைவோராக மாற்றுவதும் அரசின் இலக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் மற்றும் தடுப்பூசிகள் கையளிக்கும் நிகழ்வு 2026 ஆகஸ்ட் 21 அன்று கமத்தொழில் அமைச்சில் இடம்பெற்றது.
அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.

