மலையக மார்க்க ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன தொடருந்து நிலையங்களுக்கு இடையில் நேற்று பிற்பகல் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. Read more »
இலங்கை கிரிக்கெட்டின் ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரியவை நியமிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுக்கும் சனத் ஜயசூரியவுக்கும் இடையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. Read more »
கொஸ்லந்த பிரதேசத்தில் காட்டு யானை ஒன்று பலா மரத்தில் ஏறிய சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் கொஸ்லந்த பனபூனகொல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த பகுதிக்கு வந்த காட்டு யானை ஒன்று பலா மரத்தில் ஏறி பலாப்பழத்தை பறிக்கும் காணொளி தற்போது வெளியாகியுள்ளது. Read more »
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியன இணைந்து “மனுசவி” எனும் புதிய கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தப்படுத்தியுள்ளன. தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் தலைமையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் இலங்கை மத்திய... Read more »
நகர்ப்புற வீடுகளின் உரிமையை அதன் குடியிருப்பாளர்களுக்கே வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதுடன், அடுத்த வருடம் முதல் இது தொடர்பான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு கூறியுள்ளது. இதற்கமைய, அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீடுகள் அதன் குடியிருப்பாளர்களுக்கே முழுமையாக வழங்கப்படவுள்ளதாக நகர... Read more »
வடகொரிய பிறப்பு விகிதம் குறைந்து வருவதைத் தடுக்க, அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு பெண்களிடம் வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன் வலியுறுத்தியுள்ளார். வடகொரியாவின் தலைநகர் பியோங்யாங்கில் நடைபெற்ற 05வது தேசிய தாய்மார்கள் மாநாட்டில் அழுதுகொண்டே வடகொரிய தலைவர் இவ்வாறு கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள்... Read more »
கடுகன்னாவ, ஹெனாவல மாவட்ட வைத்தியசாலையில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (06) மதியம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உடுநுவர பகுதியைச் சேர்ந்த 32 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது சடலம் தற்போது கடுகன்னாவ ஹெனாவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. Read more »
இலங்கைக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இன்று (06) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார். இந்த கடன் தொகையானது இலங்கையின் வைப்புத்தொகை காப்புறுதித்... Read more »
கடந்த 2009 ஆம் ஆண்டு மன்னார் பரப்புக்கடந்தான் இராணுவ முகாமில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது கடமையில் இருந்த 2 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்தார். அதன்போது சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கு தொடர்பில் மன்னார் மேல்... Read more »
தனியார் பேருந்து சாரதி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 12 வருட கடூழிய சிறைத்தண்டனை உத்தரவினை பிறப்பித்துள்ளது. கடந்த 2007 ஜனவரி மாதம் மிரிஹான பகுதியில் கவனக் குறைவாக வாகனம் செலுத்தி விபத்தினை ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்கவே அவருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாள்... Read more »

