சமாதானம், மகிழ்ச்சி, சுபீட்சம் மிக்கதாக புத்தாண்டு அமைய வேண்டும்: இரா.சம்பந்தன்

பிறந்துள்ள 2024 ஆம் ஆண்டு தமிழர்களாகிய எமக்குத் தீர்க்கமான முடிவுகளை எடுக்கக் கூடிய ஆண்டாக இருக்கும் என்று நம்புகின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மலர்ந்துள்ள 2024 ஆம் ஆண்டானது இன, மத, கட்சி வேறுபாடின்றி நாட்டு மக்களுக்குச் சமாதானம், மகிழ்ச்சி, சுபீட்சம் மிக்கதாக அமைய வேண்டும்.

இவ்வாண்டு தமிழ் மக்களுக்கு நம்பிக்கையையும் எதிர்பார்ப்பும் நிறைவேற வேண்டும்.

இந்தப் புதிய ஆண்டிலாவது புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழர்களின் பிரச்சினைகள் தீர்வு காணப்படவ் வேண்டும்.

ஆட்சியில் எந்த அரசு இருந்தாலும் இந்த விடயத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் தமிழர்களாகிய நாம் தீர்க்கமான முடிவுகளை இந்த ஆண்டில் எடுப்போம். அனைவருக்கும் எனது இனிய புதுவருட வாழ்த்துக்கள் ” என தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin