மாத்தறையில் 60 மில்லியன் ரூபா பெறுமதியான காணியைக் கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கில் இரண்டாவது முறையாகவும் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான கைது பிடியாணையை மாத்தறை தலைமை நீதவான் சதுர திஸாநாயக்க இன்று (21) மீண்டும் நீடித்துள்ளார்.
மாத்தறை, பிரவுன்ஸ் ஹில் பகுதியிலுள்ள ஒன்றரை ஏக்கர் தென்னந்தோப்பை வாங்கியது தொடர்பான இவ்வழக்கில், பசில் ராஜபக்ஷ தொடர்ந்தும் ஆஜராகாததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அத்துடன், பசில் ராஜபக்ஷவின் பிணையாளர்கள் நால்வருக்கும் கடும் எச்சரிக்கை

