முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு

ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

இவருக்கு எதிராகச் சுமத்தப்பட்ட முதலாவது குற்றச்சாட்டுக்கு 7 வருட சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

 

அதேபோன்று, இரண்டாவது குற்றச்சாட்டுக்கும் 7 வருட சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

 

எனினும், இந்த இரண்டு குற்றங்களுக்குமான தண்டனைகளை வெவ்வேறாக அன்றி, ஒரே தடவையில் ஏககாலத்தில் அனுபவிப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

Recommended For You

About the Author: admin