பலாலி வீதியில் நடந்து செல்ல இராணுவம் அனுமதி!

செல்வச் சந்நிதி ஆலயத்தின் தேர் திருவிழா நாளை (27.08.2026) மற்றும் தீர்த்த உற்சவம் மறுநாள் (28.08.2026) நடைபெறவுள்ள நிலையில், ஆலயத்தை நோக்கிச் செல்லும் காவடி மற்றும் பாதயாத்திரை பக்தர்களுக்காக பலாலி வீதியில் நடந்து செல்லவும், வாகனங்களை நிறுத்தவும் இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

🔹 அனுமதிக்கப்படும் நேரம்: காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

🔹 பலாலி வீதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினூடாக செல்கிறது.

🔹 கடந்த ஆண்டு நடந்து செல்லவும் வாகனங்களை நிறுத்தவும் அனுமதி வழங்கப்படவில்லை.

செல்வச் சந்நிதி ஆலய உற்சவங்களை முன்னிட்டு பக்தர்களின் பயணத்திற்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin