முக்கிய தகவல்: யால தேசிய பூங்காவின் I மற்றும் II வலயங்கள் ஒரு மாதம் மூடப்படுகின்றன!

வறண்ட காலநிலை மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக வனவிலங்குகளின் பாதுகாப்பையும் சுற்றுச்சூழல் அமைப்பின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நோக்கில், யால தேசிய பூங்காவின் I மற்றும் II வலயங்கள் 2026 செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 15 வரை சுற்றுலாப் பயணிகளுக்காக தற்காலிகமாக மூடப்படுகின்றன.
முக்கிய தகவல்

🔸 I மற்றும் II வலயங்கள்: செப்டம்பர் 14 – அக்டோபர் 15 வரை மூடப்படும்

🔸 III, IV, V மற்றும் VI வலயங்கள்: சுற்றுலாப் பயணிகளுக்காக தொடர்ந்து திறந்திருக்கும்

🔸 வனவிலங்குகளுக்குத் தொடர்ந்து நீர் வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

🔸 இயற்கை நீர்நிலைகள் மற்றும் குளங்கள் புனரமைக்கப்பட உள்ளன

இந்தக் காலப்பகுதியில் உடவளவ, மின்னேரிய, கவுடுள்ள மற்றும் வில்பத்து உள்ளிட்ட ஏனைய தேசிய பூங்காக்கள் மற்றும் இயற்கை சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லுமாறு சுற்றுலாப் பயணிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: admin