சித் ஸ்ரீராமின் குரலில் வெளியானது ‘ரேனிகுண்டா 2’ திரைப்படத்தின் முதல் பாடல்

இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ரேனிகுண்டா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது.
அண்மையில் வெளியான இத்திரைப்படத்தின் Teaser மற்றும் First look poster நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து, தற்போது படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்திற்கு மனு ரவிச்சந்திரன் இசையமைத்துள்ள நிலையில், முதல் பாடலை பிரபல பின்னணிப் பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். கவிஞர் யுகபாரதி இப்பாடலை எழுதியுள்ளார்.
இந்தப் பாடலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்

Recommended For You

About the Author: admin