இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட
காசா முனையில், பாலஸ்தீன மக்கள் தங்கள் வீடுகளையும் கடைகளையும் மீண்டும்
கட்டியெழுப்ப களிமண் செங்கற்கள், மரக்கட்டைகள், துணிகள் மற்றும் பிளாஸ்டிக் தாள்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
அக்டோபர் 2023 முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களால்,
காசா முனையின் 90 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக காசா அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் பெரும்பான்மையான மக்கள் வசிப்பிடங்கள்
மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை இழந்து தவித்து வருகின்றனர்.

