சுங்க அதிகாரிகள் சட்டப்படி வேலை போராட்டம்

சுங்க அதிகாரிகள் இன்று காலை முதல் சட்டப்படி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமது சிக்கல்களுக்கு தீர்வு வழங்கப்படும் வரை தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என சுங்க அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அமில சஞ்ஜீவ தெரிவித்துள்ளார். நாட்டிற்கு பிரதானமான வருமானத்தை ஈட்டித்தரும் நிறுவனமாக சுங்கத் திணைக்களம்... Read more »

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 10,000 முறைப்பாடுகள்

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கடந்த ஆண்டு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 10,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 9,434 முறைப்பாடுகள் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளதாக அதன் தலைவர்... Read more »
Ad Widget

பதவி காலத்தை நீடிக்க ரணில் வகுக்கும் இரகசிய வியூகம்

ஜனாதிபதித் தேர்தலை நடத்தாமல் மிக நுட்பமான சட்ட முறைகளைப் பயன்படுத்தி தனது பதவி காலத்தை நீடிக்கும் உத்திகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையாள்வதாக தெரிகிறது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை நீக்க வேண்டும் என்பதில் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் உடன்பாடு உண்டு. ஆனால்,... Read more »

25 இலங்கையர் உட்பட 186 வெளிநாட்டவர்களை நாடு கடத்திய மாலைத்தீவு

விசா விதிமுறை மீறல் மற்றும் போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 25 இலங்கையர்கள் உட்பட 186 வெளிநாட்டவர்களை மாலைத்தீவு நாடு கடத்தியுள்ளதாக ஊடக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்களில் அதிகளவானோர் பங்களாதேஷைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அந் நாட்டு அறிக்கைகளின்படி,... Read more »

சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிக நிறுத்தம்

இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று(15) காலை 06.30 உடன் தற்காலிகமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி நேற்றும்(14) நேற்று முன்தினமும்(13)... Read more »

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

தமிழரசுக் கட்சியின் யாப்பின் பிரகாரம் பொதுச்சபைக் கூட்டத்தில் 161 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும். ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் எத்தனை பேர் கலந்து கொள்ள வேண்டும் என யாப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால் திருகோணமலையில் கடந்த மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற பொதுச்... Read more »

சிறிதரனின் அமைதியும் அவரது முகநூல் பதிவும் சொல்வது என்ன?

உட்கட்சி அரசியல் விவகாரம் என்பதால் நீதிமன்ற தடை உத்தரவையும் பொருட்படுத்தாமல் எதிர்வரும் 19ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்தினால் என்ன? என்று கட்சிக்குள் விமர்சனங்கள் எழும் நிலையில் சிறிதரன் அமைதியாக இருப்பது குறித்து பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர். நீதிமன்ற கட்டளைக்கு ஏற்ப செயற்பட... Read more »

சர்வஜன வாக்கெடுப்பை நடத்த ஆலோசிக்கும் ரணில்

தென்னிலங்கை அரசியலில் சமகால போக்கு பாரம்பரிமான கட்சிகளுக்கு பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தி உள்ளது. ஜே.வி.பி எனப்படும் தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியே இதற்கு காரணமாக உள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிளவுபட்டு உருவான பொதுஜன பெரமுன 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சிமன்றம் தேர்தலுடன் இலங்கையில்... Read more »

பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்ப்பதில் அரசியல் தலையீடு

மாணவர்களை பிரதான பாடசாலைகளின் இடைநிலை வகுப்புகளுக்கு சேர்ப்பதற்கு அண்மைய காலங்களாக அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு நபர்கள் தலையிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. குறித்த செய்திகளின் அடிப்படையில் 2020ஆம் ஆண்டு தொடக்கம் 2021ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் தேசிய பாடசாலைகளின் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கு அரசியல்வாதிகள்... Read more »

கொழுப்பில் சம்பந்தன்-சிறீதரன் சந்திப்பு

உட்கட்சி ஜனநாயகத்தைச் சிதைக்கும் வகையில் நடைபெறும் சூழ்ச்சிகளை முறியடித்து உடனடியாக மாநாட்டை நடாத்துமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், கட்சியின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரனுக்கு அறிவுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகிய இருவரும்... Read more »