ஜே.வி.பி. ஆட்சிக்கு வந்தால் நாடு பிளவுபடும்: மேர்வின்

ஜே.வி.பி. ஆட்சிக்கு வந்தால் நாடு பிளவுபடும் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரித்துள்ளார்

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வௌியிடும் போது அவர் மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், நாட்டை பிளவுபடுத்தும் நோக்கிலேயே ஜே.வி.பியினர் ஆட்சிக்குவர முயற்சிக்கின்றனர். அவர்களின் செயற்பாடுகள் காரணமாக நாடு நிச்சயம் பிளவுபடும்.

நாட்டில் பொருட்களின் விலை குறைவடைந்துள்ளது. பொருட்களுக்கு தட்டுப்பாடும் இல்லை, சமையல் எரிவாயு மற்றும் எரிபொருட்களுக்கும் தட்டுப்பாடு இல்லை எனவும் சிலர் கூறுகின்றனர்.

ஆனால் அது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல. ஏனென்றால் சமையல் பொருட்கள், விவசாய உற்பத்திகள், ஆடைகள் என அனைத்தும் இன்று அதிக விலைக்கே விற்பனை செய்யப்படுகின்றன.

தேசிய மக்கள் சக்தி ஒரு சந்தர்ப்பத்தில் விபச்சாரத்தை சட்டமாக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது. இன்று விபச்சாரம் மட்டுமே மிக குறைந்த விலையில் கிடைப்பதாக தெரிகிறது.

ஒருகாலத்தில் ஜே.வி.பியினரின் செயற்பாடுகளே நாட்டை அதள பாதாளத்திற்குத் தள்ளி விட்டுள்ளது.

அவ்வாறானவர்கள் இன்று நாட்டில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற மீண்டும் முயற்சிக்கின்றனர்.

ஆனால் அவர்கள் அதிகாரத்துக்கு வந்தால் நாடு பிளவுபட்டுவிடும் என்றும் மேர்வின் சில்வா தொடர்ந்தும் எச்சரித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin