போதைப்பொருளுடன் சம்மாந்துறையில் ஒருவர் கைது!

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரை சம்மாந்துறை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சென்னல் கிராமம் 1 பகுதியில் சம்மாந்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே சந்தேகத்துக்கிடமாக... Read more »

காரைதீவில் கடந்த ஏழுநாட்களாக தண்ணீர் இல்லை – மேலும் 2 நாட்கள் செல்லும் என தெரிவிப்பு

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் பிரதான பாரிய நீர்க்குழாய் உடைத்தெறியப்பட்ட காரணத்தால் கடந்த ஏழு நாட்களாக காரைதீவுக் கிராமத்திற்கு குழாய் நீர் விநியோகம் முற்றாக தடைப்பட்டுள்ளது. தண்ணீரில் மிதந்த காரைதீவுக்கு தண்ணீர் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. தற்காலிகமாக மாவடி பள்ளியில் இணைப்பிலிருந்து குடிநீர்... Read more »
Ad Widget

புதிய அரசியலமைப்பில் மாகாண சபை முறைமை நீக்கம்: ரில்வின் சில்வா

இலங்கையில் நடைமுறையில் உள்ள அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள மாகாண சபை முறைமையை முடிவுக்குக் கொண்டு வரவும், புதிய அரசமைப்பின் ஊடாக அனைத்து இன மக்களுக்கும் சமமான உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் தேசிய மக்கள் சக்தி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று... Read more »

ஷேக் ஹசீனா ஆட்சியில் ஆண்டுக்கு 16 பில்லியன் டொலர் திருடப்பட்டது

பங்களாதேஷில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பிரதமர பதவியை இராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவர் இருக்கும் இடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால... Read more »

வட்டி விகிதத்தை நிலையாக பேணுவது அவசியம்: ஆளுநர் விளக்கம்

பணவீக்கம் அதிகரிக்காத வகையில் நிலையான வட்டி வீதத்தை பேணுவது மத்திய வங்கியின் பொறுப்பாகும் எனவும், கடந்த காலங்களில் அவ்வாறு நடக்கவில்லை எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் பணவீக்கம் வேகமாக அதிகரித்துள்ள போதிலும், தற்போதைய நிதிக் கொள்கையின்படி... Read more »

மாகாண சபை முறைமை அகற்றப்படுவதை ஏற்க முடியாது: மனோ

“மாகாணசபை என்பதை நாம் ஏற்க மாட்டோம். ஆனால், இன்றைய மாகாணசபை முறைமை என்பது தமிழ் மக்களின் போராட்டங்களால் கிடைக்க பெற்றது. ஆகவே, அதை நாம் எதிர்க்கவும் போவதில்லை” என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, கடந்த தேர்தல்களுக்கு முன் என்னிடம் நேரடியாக கூறியுள்ளார். பல... Read more »

பீரங்கி குண்டை பொம்மை என நினைத்த சிறுவர்கள்: வெடித்து சிதறியதில் மூன்று சிறுவர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், ஜானி கேல் பகுதியில் பீரங்கி குண்டு வெடித்ததில் மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களுள் இரண்டு சகோதரர்களும் உள்ளடங்குவர். குறித்த சிறுவர்கள் பாடசாலை முடிந்து வீடு திரும்பும் வழியில் கைவிடப்பட்ட நிலயைில் பீரங்கி குண்டு ஒன்று கிடந்துள்ளது. அதனை பொம்மை... Read more »

இன்ஸ்டாவிலும் இனி லைவ் லொகேஷன் பகிரலாம்

இன்ஸ்டாகிராமிலும் இனி லைவ் லொகேஷனை பிறருக்கு நேரடி குறுஞ்செய்தி மூலம் பகிர்ந்துகொள்ள முடியும். இன்ஸ்டாகிராமிலும் தற்போது லொகேஷன் ஷேரிங் எனும் புதிய அம்சம் வந்துவிட்டது. இந்த லைவ் லொகேஷன் அம்சம் டிஃபொல்ட்டாக ஆக ஸ்விட்ச் ஓஃப் செய்யப்பட்டிருக்கும். மேலும் ப்ரைவட்டாக DMகளில் மட்டுமே இதனை... Read more »

மன் சிட்டியை வீழ்த்தி முதலிடத்தில் நீடிக்கிறது லிவர்பூல்

இங்கிலாந்து பிரீமியர் லீக் உதைப்பந்தாட்டத் தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் மென்செட்டர் சிட்டி கழகத்தினை 2:0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய லிவர்பூல் கழகம் தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கிறது. உலகின் கழக மட்ட உதைப்பந்தாட்டத் தொடர்களில் மிக அதிகமான பணம் புரளும் தொடரான இங்கிலாந்து... Read more »

துணையை அன்பாக பார்த்துக் கொள்ளும் ராசிகள்

ஜோதிடத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ராசிக்கும் வித்தியாசமான குணநலன்கள் உள்ளன. அந்த வகையில், திருமண பந்தத்தை எடுத்துக்கொண்டால், தம்பதிகள் இறுதி வரை ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றுதான் எண்ணுவர். அதன்படி, அன்பும் மரியாதையும் ஒருசேர எந்த ராசியினர் சிறந்த ஜோடியாக இருப்பார் எனப் பார்ப்போம். மேஷம்... Read more »