யாழ்ப்பாணத்தில் கைதானவர்களில் சுமார் 70 வீதமானவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் , போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்தமை , விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் 190 பேர் கைது செய்யப்பட்டனர். கைது... Read more »
குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் போஷாக்கான உணவாக உட்கொள்ளும் திரிபோஷாவில் உள்ள இரசாயனங்களை(அஃப்லாடெக்சிக்சின்) இரு மடங்காக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் முன்னிலை சோசலிசக் கட்சியின், பிரசார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார். ஒருவன் செய்திப்பிரிவுக்கு இது தொடர்பில்... Read more »
சுனாமி அனர்த்தத்தின் பின்னர் நாட்டின் நிர்மாணிக்கப்பட்ட சுனாமி முன்னெச்சரிக்கை சமிக்ஞை கோபுரங்களில் பெரும்பாலானவை செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, நாட்டின் 14 கரையோர மாவட்டங்களில் 77 சுனாமி முன்னெச்சரிக்கை சமிக்ஞை கோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அமெரிக்க நிறுவனம் ஒன்று குறித்த... Read more »
அவுஸ்திரேலியாவின் கிழக்கு பிராந்தியத்தில் நேற்று (25) இரவு கனமழையுடன் பலத்த காற்றும் வீசியதால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. குவீன்ஸ்லாந்து மாநிலத் தலைநகர் பிரிஸ்பேனிலும் கோல்ட் கோஸ்ட் பிராந்தியத்திலும் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக மாநில எரிசக்தி நிறுவனமான எனர்ஜெக்ஸ் தெரிவித்துள்ளளது. இதன் காரணமாக... Read more »
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் முஜீப்-உர்-ரகுமான், பசல்ஹக் பருக்கி, நவீன்-உல்-ஹக் ஆகியோர் பல நாடுகளில் நடக்கும் 20 ஓவர் லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். இதற்கிடையே அவர்கள் தங்களை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் வருடாந்திர மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரினர்.... Read more »
வெளிநாடுகள் இருந்தவாறு இலங்கைக்குள் போதைப் பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக்குழுக்களை வழிநடத்தி வரும் 30 பேரை கைது செய்து, நாட்டுக்கு கொண்டு வருவதற்காக விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். துபாய் நாட்டில் இருக்கும் 29 பாதாள... Read more »
1994 ஆம் ஆண்டு முதல் பல்வேறு கட்சிகளின் அதிகாரத்தில் இருந்த ருவன்வெல்ல பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் அதிகாரத்தை இம்முறை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. அது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ருவன்வெல்ல தொகுதிக்கு பொறுப்பான மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துசிதா விஜேமான்ன... Read more »
களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தாக்கி கொலை யெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான இந்த கைதி இன்று அதிகாலை நாகொட போதனா வைத்தியசாலையில் உயிரிழந்ததாக சிறைச்சாலையின் தகவல்கள் கூறுகின்றன. மோல்காவ,கரவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான பீ.ஜீ.சுனில் என்ற கைதியே... Read more »
வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலியான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாமென பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. உரிய முறைமைகளின் படி, தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றால், நாடு கடந்த பிரச்சினைகளில் தலையிட முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட... Read more »
தனது 15 வயதான மகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய பொலிஸ் சார்ஜன்டை நாரம்மல பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் களப்படை தலைமையகத்தில் சேவையாற்றி வந்த பொலிஸ் சார்ஜன்டே இவ்வாறு நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். நாராம்மல தெமடகஹாவெல பிரதேசத்தை சேர்ந்த இந்த சந்தேக நபர் கடந்த... Read more »

