கைதி ஒருவர் கொலை

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தாக்கி கொலை யெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான இந்த கைதி இன்று அதிகாலை நாகொட போதனா வைத்தியசாலையில் உயிரிழந்ததாக சிறைச்சாலையின் தகவல்கள் கூறுகின்றன.

மோல்காவ,கரவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான பீ.ஜீ.சுனில் என்ற கைதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிறைச்சாலையில் நடந்த தாக்குதலால் காயமடைந்த நபர் நேற்று முன்தினம் இரவு நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,5வது விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

பிரேதப் பரிசோதனைக்காக உடல் வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் களுத்துறை சிறைச்சாலையின் அத்தியட்சகர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

சம்பவம் குறித்து களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin