வடமராட்சி பகுதியில் 84 கிலோ கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் – வல்லிபுரம் காட்டு பகுதியில் இருந்து 84 கிலோ கஞ்சா போதைப்பொருள் காவல்துறை விசேட அதிரடி படையினரால் இன்றைய தினம் திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது. காவல்துறை விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதிக்கு விரைந்த அதிரடி படையினர் ,... Read more »

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக சஜித் மனு தாக்கல்

மின் கட்டண அதிகரிப்பின் காரணமாக மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளார். மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி இன்று (08) உச்ச நீதிமன்றில்... Read more »
Ad Widget

பங்களாதேஷ் பிரதமரை வாழ்த்தினார் ஜனாதிபதி ரணில்

பங்களாதேஷ் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று, மீண்டும் பிரதமராக பதவியேற்ற ஷேக் ஹசீனாவிற்கு (Sheikh Hasina) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். பங்களாதேஷ் பிரதமர்,ஷேக் ஹசீனாவின் தொலைநோக்குப் பார்வையுடனான தலைமைத்துவத்தைப் பாராட்டியுள்ள ஜனாதிபதி, அவரது அறிவும், அனுபவமும் பங்களாதேஷ் மக்களுக்கு பெரும் பயனளிக்கும் என்றும்... Read more »

இலங்கை வரலாற்றில் பிரம்மாண்டமாக இடம்பெற்ற பொங்கல் விழா

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில், இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1,008 பொங்கல் பானை, 1,500 பரத நாட்டிய கலைஞர்கள், 500 கோலங்களுடன் பொங்கல் விழா நடைபெற்றது. இந்நிகழ்வு இன்று திருகோணமலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ராசமாணிக்கம் சாணக்கியன், சதாசிவம்... Read more »

15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு: மூவர் கைது

மட்டக்களப்பு – காத்தான்குடி – புதுகுடியிருப்பு பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவரை அழைத்துச்சென்று கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 3 பேர் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். கடந்த சனிக்கிழமையன்று (06)... Read more »

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் லசந்தவின் நினைவு தினம் அனுஷ்டிப்பு

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 15வது ஆண்டு நினைவு தினம் இன்று (08) காலை 10 மணிக்கு மட்டக்களப்பில் உள்ள ஊடகவியலாளர்களின் நினைவு தூபியில் அனுஷ்டிக்கப்பட்டது. கிழக்கு இலங்கை செய்தியாளர் சங்கம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும்... Read more »

வவுனியா மாவட்ட தலைவியை விடுதலை செய்யக்கோரி முல்லைத்தீவில் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மீதான பொலிசாரின் அடாவடித்தனத்தை கண்டித்தும், வவுனியா மாவட்ட தலைவி விடுதலை செய்யப்பட வேண்டும் என கோரி முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகளால் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. வவுனியாவில் ஜனாதிபதி வருகையின் போது நியாயம் கேட்க... Read more »

ஹெஸ்பொல்லாவின் முக்கிய தளபதி இஸ்ரேல் தாக்குதலில் பலி

லெபனானின் தெற்கு பகுதியில் திங்களன்று (08) இஸ்ரேலின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஹெஸ்பொல்லாவின் உயரடுக்கு ரத்வான் படையின் சிரேஷ்ட தளபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த தகவலை நம்பகத் தகுந்த ஆதாரங்களை மேற்கொள்காட்டி ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. ரத்வான் படையின் துணைத் தலைவர் விஸ்ஸாம் அல்-தவிலே... Read more »

மௌனம் காக்க இலங்கை அரசாங்கம் முடிவு?

இந்தியாவுக்கும் மாலைத்தீவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை குறித்து மௌனம் காக்குமாறும் தேவையற்ற கருத்துகளை வெளியிட கூடாதென்றும் இலங்கை அரசாங்கம் முடிவுசெய்துள்ளதாக அறிய முடிகிறது. இலங்கையின் அரசியலில் மாலைத்தீவு விவகாரம் நேரடியான தாக்கங்களை ஏற்படுத்த கூடும் என்பதால் இந்த முடிவை அரசாங்கம் எடுத்துள்ளதாகவும் அறிய... Read more »

EaseMyTrip இணையம் சுற்றுலா முன்பதிவை நிறுத்தியது

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சமூக ஊடகங்களில் இழிவான கருத்துகளை மாலைத்தீவின் சில அமைச்சர்கள் பதிவுசெய்ததால் இருநாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை அதிகரித்துள்ளதன் எதிரொலியாக EaseMyTrip இணையத்தளம் மாலைத்தீவுக்கான சுற்றுலா முன்பதிவுகளை இடைநிறுத்தியுள்ளது. EaseMyTrip இணையத்தளம் இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கு சுற்றுலா... Read more »