மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக சஜித் மனு தாக்கல்

மின் கட்டண அதிகரிப்பின் காரணமாக மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளார்.

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி இன்று (08) உச்ச நீதிமன்றில் மனுவொன்றை சமர்ப்பித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஒரு யுனிட் மின்சாரத்தின் விலையேற்றம் அடையும் இவ்வேளையில் அதனை மையமாகக் கொண்ட வேலைத்திட்டம் நாட்டில் இல்லாதது பாரிய பிரச்சினையாக இருப்பதால் அனைத்து மின்சார பாவனையாளர்களின் உரிமைகளுக்காகவே இந்த அடிப்படை உரிமை மனு முன்வைக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: admin