இலங்கை இராணுவத்திற்கு எச்சரிக்கை

சட்டவிரோதமான முறையில் ரஷ்ய அல்லது உக்ரைன் இராணுவத்தில் இணைய வேண்டாம் என அனைத்து ஆயுதப்படைகளுக்கும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. ரஷ்ய ராணுவத்தில் இலங்கையிலுள்ள இராணுவத்தினர் சிலர் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இதனுடன் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என அமைச்சகம் தெரிவித்துள்ளது.... Read more »

தமிழர் பகுதி கல்முனை பிரதேச செயலகம் பறிக்கப்படுவது ஏன்? சிறிதரன் ஆதங்கம்

அம்பாறை “கல்முனை வடக்கில் 30 வருடங்களுக்கு மேலாக நடாத்திச் செல்லப்படும் பிரதேச செயலகத்தை மூடுவதற்கும் தரம் குறைப்பதற்கும் ஒரு சிலர் முயற்சித்து வருவதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆயுர்வேத சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்... Read more »
Ad Widget

டெல்லி அணிக்கு முதல் வெற்றி

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் நேற்றைய தின போட்டி முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்களை குவித்தது. எம்.எஸ். டோனி 37 ஓட்டங்களுடனும், ஜடேஜா 21 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த போட்டியில் சென்னை அணியை வீழ்த்திய டெல்லி அணி... Read more »

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தலைவருக்கு 12 இலட்ச ரூபாய் அபராதம்

விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வெற்றியடைந்ததையடுத்து, இந்த போட்டியில் குறிப்பிட்ட நேரத்துக்குள் டெல்லி அணியினர் பந்து வீசவில்லை என்ற காரணத்தினால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைவர் ரிஷப் பண்ட்க்கு... Read more »

ரஷ்ய இராணுவத்திற்கு கட்டாய ஆள் சேர்ப்பு

இராணுவத்திற்கு புதிதாக ஆட்சேர்ப்பிற்கான ஆணையில் ரஷ்ய ஜனாதிபதி விளடிமீர் புட்டின் (Vladimir Putin) கையேழுத்திட்டுள்ளார். இராணுவத்தைப் பலப்படுத்தும் நோக்கத்திற்காக 150000 பேரை சேர்ப்பதற்கு திட்டம் வகுப்பட்டுள்ளது.வருடாந்த இராணுவ சேர்ப்பின் செயற்பாடாக இதுவுள்ளது. இதனை ஜனாதிபதி செயலகம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.ரஷ்யாவில் உள்ள ஆண்கள் அனைவரும்... Read more »

பயங்கரவாத குழுக்களின் கட்டுப்பாட்டில் இலங்கையர்கள்

மியான்மர் தாய்லாந்து எல்லைக்கு இடையில் பயங்கரவாத குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள ‘சைபர் கிரிமினல் ஏரியா” எனப்படும் 3 முகாம்களில் 56 இலங்கையர்கள் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்கள் வாயிலாக செய்திகள் பல்வேறு செய்திகள் வெளியாகியிருந்தன. அதனையடுத்து, இலங்கை அரசாங்கம் தலையீடு செய்து குறித்த... Read more »

சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம்

அனுராதபுரம், இரத்தினபுரி, குருநாகல், பதுளை ஆகிய வைத்தியசாலைகளில் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இன்று அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இன்று காலை 6.30 முதல் பணிப்புறக்கணிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர்... Read more »

அரசாங்கத்திற்குள் பிளவு: சுயாதீனமாக செயற்பட தீர்மானம்

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையே எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் பிளவு ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சிகள் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை மேலும் உறுதிப்படுத்துவது வகையிலே, அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர... Read more »

மைத்திரி கருத்து: இராஜதந்திர நெருக்கடியை ஏற்படுத்துமா?

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதலுடன் இந்தியாவை தொடர்புபடுத்தும் சர்ச்சைக்குரிய கருத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இந்தியா இருப்பதாக... Read more »

அதிகளவான உணவு வீண்விரயம் – ஐ.நா

வீடுகளில் நாளொன்றுக்கு 100 கோடி தொன் உணவுகள் வீண்விரயம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகளாவிய உணவு விரயம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் 5 இல் 1 பங்கு உணவு விரயமானமையும் அறிக்கையில்... Read more »