சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம்

அனுராதபுரம், இரத்தினபுரி, குருநாகல், பதுளை ஆகிய வைத்தியசாலைகளில் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இன்று அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

இன்று காலை 6.30 முதல் பணிப்புறக்கணிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் தெரிவித்துள்ளார்.

இன்று தமது பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்க அதிகாரிகள் தவறினால் நாளை முதல் நாடளாவிய ரீதியில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin