அங்க 6000-க்கும் மேற்பட்ட மக்கள், தங்களோட கைக்குள்ள தாங்களா விரும்பி ஒரு சின்ன மைக்ரோசிப்பை பொருத்திக்கிட்டாங்க.
இந்த சிப் எவ்வளவு சின்னதுன்னா, ஒரு அரிசி பருக்கை அளவு தான் இருக்கும்.
இதை கையில் பொருத்திக்கிட்டா, ஆபிஸ் ID கார்டு, வீட்டு சாவி, மெட்ரோ கார்டு, பணம் செலுத்துற கார்டு எல்லாத்துக்கும் பதிலா இந்த கையையே பயன்படுத்தலாம். கையை ஸ்கேனர் அருகில் காட்டினால் போதும், கதவு திறந்துவிடும்.
பலரும் நினைக்கிற மாதிரி இதில் பேட்டரி கிடையாது, GPS கிடையாது. யாரும் உங்களை ட்ராக் பண்ண முடியாது. இது Passive RFID மற்றும் NFC தொழில்நுட்பத்தில் வேலை செய்யுது. ஸ்கேனர் பக்கத்துல கொண்டு போகும் போது மட்டும் தான் அது வேலை செய்யும்.
இதை ஆதரிக்கிறவங்க, இது தான் எதிர்காலம், இனி பர்ஸ், சாவி, கார்டு எதையும் தூக்கிட்டு அலைய வேண்டியதில்லைன்னு சொல்றாங்க.
அதே நேரத்துல, இது தனிநபர் பாதுகாப்பு, தகவல் திருட்டு, மனித உடலுக்குள் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு போகலாம்ங்கிற கேள்வியையும் எழுப்பியிருக்கு.
முக்கியமான விஷயம் என்னன்னா, இது முழுக்க முழுக்க அவரவர் விருப்பத்தின் பேரில் செய்யப்படுற ஒரு விஷயம், யாரும் கட்டாயப்படுத்தல.
தொழில்நுட்பம் நாளுக்கு நாள் நம்ம உடம்போடு ஒன்றிணைந்து வரும்போது, ஸ்வீடன் நமக்கு எதிர்காலம் எப்படி இருக்கும்னு ஒரு சின்ன முன்னோட்டத்தை காட்டியிருக்கு.

