விமான நிலையப் பாதுகாப்பை எளிதாக்கும் 10 வயது சிறுவனின் சாதனை !!

விமான நிலையப் பாதுகாப்பை எளிதாக்கும் 10 வயது சிறுவனின் சாதனை !!

செயற்கை நுண்ணறிவு உதவியுடன் புதிய கருவி உருவாக்கம்!

கலிபோர்னியாவில் நடைபெற்ற சிலிக்கான் பள்ளத்தாக்கு சர்வதேச கண்டுபிடிப்புகள் திருவிழாவில் தைவான் நாட்டு கண்டுபிடிப்பாளர்கள் முதல் பரிசைக் கைப்பற்றியதுடன்,

 

24 தங்கப் பதக்கங்களையும் மற்றும் பிற சிறப்பு விருதுகளையும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

 

இந்தச் சிறப்பான வெற்றியாளர்களில், 10 வயது சிறுவனான Hsu Ting-Wei என்பவரும் ஒருவர். இவரது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த

 

‘புதிய செயற்கை மின்னணு மூக்கு கருவி தங்கப் பதக்கத்தையும், சர்வதேச கண்டுபிடிப்பாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சிறந்த கண்டுபிடிப்பு விருதையும் வென்றுள்ளது.

 

இவரது இந்த அமைப்பு, காற்று மாதிரி சேகரிப்பு, கேஸ் குரோமடோகிராபி-மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி மற்றும் ஏஐ அடிப்படையிலான வாசனை கண்டறிதல்

 

ஆகியவற்றை ஒருங்கிணைத்து, எந்தவித நேரடித் தொடர்பும் இன்றி இரசாயனங்களைக் கண்டறிகிறது.

 

குறிப்பாக விமான நிலையங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு, எக்ஸ்-கதிர் பேக்கேஜ் ஸ்கேனர்களுக்குப் பின்னால் நிறுவப்பட்டு,

 

இரசாயனங்களைக் கண்டறியும் திறனை வழங்குவதுடன், போதைப்பொருட்கள் அல்லது நச்சுத்தன்மை வாய்ந்த உணவுப் பொருட்கள் போன்ற அச்சுறுத்தல்களை அடையாளம் காணவும் உதவும்.

 

எல்லைகளில் ஃபென்டானில் போன்ற போதைப்பொருட்களை அமெரிக்க அதிகாரிகள் கண்டறிய உதவுவதோடு, ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல்

 

ஆபத்துகளைத் தடுத்து நிறுத்த தனது கண்டுபிடிப்பு உதவும் என்று தான் நம்புவதாக ஹ்சு தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin