தலிதாவின் சிலை மீண்டும் மேலாடையின்றி காட்சியளிப்பு !!

தலிதாவின் சிலை மீண்டும் மேலாடையின்றி காட்சியளிப்பு !!

பாரிஸில் பிரபல பாடகி தலிதாவின் சிலை மீண்டும் தனது மார்புப் பகுதியில் தங்க நிறத்துடன் காட்சியளிக்கத் தொடங்கியுள்ளது. நகராட்சி நிர்வாகம் சிலையை சீரமைத்து வெறும் 15 நாட்களே ஆன நிலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

XVIIIஆம் வட்டாரத்தில் உள்ள தலிதா சதுக்கத்தில் அமைந்துள்ள அவரது மார்பளவு சிலைக்கு, கடந்த ஜூலை 25ஆம் தேதி பாரிஸ் நகராட்சி புதிய பூச்சு மற்றும் பாதுகாப்புப் படலத்தை (patine) பூசியிருந்தது. சிலையின் மார்புப் பகுதியில் காணப்பட்ட தங்க நிறத்தை மறைப்பதே இந்த சீரமைப்பின் நோக்கமாக இருந்தது.

 

ஆனால், ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள், சுற்றுலாப் பயணிகள் சிலையைத் தொடுவதால் அந்தப் பகுதியில் மீண்டும் தங்க நிறம் வெளிப்படத் தொடங்கியது.

 

இந்த விவகாரம் முதலில் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. ஒரு இணையவாசி, “தலிதாவின் சிலை மீண்டும் மேலாடையின்றி உள்ளது. மீண்டும் பூசுவது அவ்வளவு எளிதான வேலை அல்ல!” என்று விமர்சித்தார்.

 

பின்னர் Saccage Paris இயக்கத்துடன் தொடர்புடைய சில சமூக வலைதளக் கணக்குகளும் பாரிஸ் நகராட்சியை கடுமையாக விமர்சித்தன. சிலர் சிலையை மீண்டும் பூசுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களின் தரம் மற்றும் அதற்கான செலவு குறித்து கேள்வி எழுப்பினர்.

 

நகராட்சி மேற்கொண்ட சீரமைப்பு மூன்று வாரங்கள்கூட நீடிக்காதது, தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: admin