இவை AI படங்கள் அல்ல டிரோன் தாக்குதலுக்கு மத்தியில் லிபிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து!
லிபியாவின் தலைநகரான திரிபோலிக்கு மேற்கே அமைந்துள்ள சாவியா (Zawiya) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
எண்ணெய் மற்றும் ஆற்றல் கட்டமைப்பு வசதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்டு வரும் தொடர் டிரோன் தாக்குதல்களுக்கு மத்தியில், அங்குள்ள எரிபொருள் சேமிப்புத் தொட்டி ஒன்றில் இருந்து கடுமையான தீப்பற்றி எரிந்ததோடு, அடர்ந்த கரும்புகையும் வெளியேறியதாக லிபியாவின் தேசிய எண்ணெய் நிறுவனம் (NOC) தெரிவித்துள்ளது, சேத விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


