வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி தேசிய ரீதியில் சிறந்த இளம் புத்தாக்குனராகத் தெரிவு

வளர்முக நாடுகளின் பெண்களுக்கான விஞ்ஞான அமைப்பின் இலங்கைக் கிளையும் ஸ்ரீ ஜெயவர்த்தனபுரப் பல்கலைக்கழகத்தின் பிறப்புரிமையியல் மற்றும் மூலக்கூற்று உயிரியல்த்துறையும் இணைந்து தேசிய ரீதியில் மாணவருக்கான புத்தாக்கப் போட்டி ஒன்றை நடத்தியிருந்தது.

இதில் 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த மகளிர் பாடசாலை மாணவ இளம் புத்தாக்குனராக வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி மதுரா அருந்தவம் தெரிவு செய்யப்பட்டார்.

சிறந்த பெண் புத்தாக்குனருக்கான பதக்கத்தை ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சித்தானந்த லியனஹே அணிவித்ததுடன் மாணவிக்கான சான்றிதழை வளர்முக நாடுகளுக்கான பெண்களுக்கான விஞ்ஞான அமைப்பின் தலைவி பேராசிரியர் சுகந்திக்கா சுரேஷ் அவர்களும் வழங்கினர்.

இந்நிகழ்வு கடந்த 14 ஆம் திகதி ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மூதவை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

Recommended For You

About the Author: webeditor