வரலாற்றுச் சிறப்புமிக்க விகாரை ஒன்றில் திருடப்பட்ட, கோடி கணக்கில் பெறுமதி வாய்ந்த புராதன புத்தர் சிலையை விற்க முயன்ற பௌத்த துறவி ஒருவரும், அவரது கூட்டாளிகள் மூவரும் சொகுசு கார் மற்றும் சிலையுடன் கண்டியில் வைத்து கையும் மெய்யுமாக அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்!
வியாபாரிகளாக மாறிய பொலிஸார் – வீழ்ந்த வலை!
மஹியங்கனை ரஜ மகா விகாரையிலிருந்து திருடப்பட்ட விலைமதிப்பற்ற இந்த புராதன சிலை, கண்டி – அனுராதபுர சந்திக்கு அருகில் வைத்து பல கோடிகளுக்கு கைமாறப்போவதாக பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அவ்வளவு தான்! களத்தில் குதித்த பொலிஸார், “நாங்கள் தான் சிலைய வாங்கப்போறோம்” என்று கோடீஸ்வர வியாபாரிகள் போல வேடமிட்டு சந்தேகநபர்களுடன் டீல் பேசியுள்ளனர். சிலையைக் கொண்டு வந்தால் பணத்தைத் தருவதாகக் கூறி கண்டி நகருக்கு வரவழைத்துள்ளனர்.
சொகுசு காரில் வந்த துறவி – பகீர் பின்னணி!
குறிப்பிட்ட இடத்திற்கு இப்பகமுவ பகுதியைச் சேர்ந்த பௌத்த துறவி ஒருவருடன், மேலும் 3 பேர் மிக பாதுகாப்பாக சொகுசு கார் ஒன்றில் சிலையைக் கொண்டு வந்து இறங்கியுள்ளனர்.
டீல் முடியப் போகிறது என்று அவர்கள் நினைத்த கணத்தில், சுற்றி நின்ற வியாபாரிகள் (பொலிஸார்) சட்டென தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தி, நான்கு பேரையும் மடக்கிப் பிடித்து விலங்குகளைப் பூட்டினர்!
🔍 அடுத்து நடக்கப்போவது என்ன?
♦️புராதன ரகசியம் – கைப்பற்றப்பட்ட சிலை எவ்வளவு பழமையானது? அது தங்கத்தால் ஆனதா? என்பதை ஆராய தொல்பொருள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது. 🏺📜
♦️உள்வீட்டு சதியா? – விகாரைக்குள் இருந்தே இந்த சிலை திருடப்பட்டுள்ளதால், அங்குள்ள யாருக்கேனும் இதில் தொடர்புள்ளதா என கண்டி மற்றும் மஹியங்கனை பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
🔴சந்தேகநபர்கள் நால்வரும் சொகுசு காருடன் கண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். சினிமா பட பாணியில் நடந்த இந்த அதிரடி கைது சம்பவம் இப்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங்!

