உலகின் பல நாடுகள் பல்வேறு துறைகளில் பெருமளவு முதலீடுகளை மேற்கொண்டு வரும் நிலையில், சீனா தனது அடுத்த தலைமுறை கல்வி சூழலை உருவாக்குவதில் தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
பாரம்பரிய கரும்பலகைகளுக்கு மாற்றாக, நவீன டிஜிட்டல் ஸ்மார்ட் போர்டுகள், ஊடாடும் (Interactive) கற்றல் முறைகள் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான கல்வி அணுகுமுறைகள் பாடசாலைகளில் அதிகரித்து வருகின்றன.
மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்துவதில் தொழில்நுட்பம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டாக இது பார்க்கப்படுகிறது

