தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்க வடகிழக்கு ஆயர் மன்றம் தீர்மானம்

தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்க வடகிழக்கு ஆயர் மன்றம் தீர்மானம்

​தமிழ் மக்களின் அரசியல் தீர்வை முன்னிறுத்தி, சிதறிக்கிடக்கும் தமிழ் அரசியல் கட்சிகளை ஒரே நேர்க்கோட்டில் ஒன்றிணைக்கும் புதிய முயற்சியில் இறங்க வடகிழக்கு ஆயர் மன்றம் தீர்மானம் மேற் கொண்டுள்ளது.

​யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மறைமாவட்டங்களின் ஆயர்களும், குருமுதல்வர்களும் பங்கேற்ற வடகிழக்கு ஆயர் மன்றத்தின் விசேட அமர்வு கடந்த புதன்கிழமை (பங்குனி 18) வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.

 

​தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் குறித்த இக்கட்டான சூழலில், மதத் தலைவர்களின் இந்த ஒன்றிணைப்பு முயற்சி அரசியல் தளத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: admin