பருத்தித்துறை மருதங்கேணி பிரதான வீதியில் இறந்த நிலையில் காணப்பட்ட முதலை..!
இன்றைய தினம்(12.03.2026) காலை பருத்தித்துறை மருதங்கேணி பிரதான வீதியில் அதாவது வலிக்கண்டி பகுதியை அன்மித்த பகுதியில் இறந்த நிலையில் முதலை ஒன்று காணப்பட்டது
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது
பிரதான வீதியின் கரையோரப் பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களில் அதிகளவான முதலைகள் வசித்து வருவதை தொடர்ந்து அவ் முதலைகள் இரவு நேரங்களில் வீதியோரங்களில் சூடு காய்வதற்கு வருவது வழமை
இதன் தொடர்ச்சியாகவே வீதியில் இருந்த முதலையினை கனகர வாகனம் மோதியதால் குறித்த முதலை இறந்து இருக்கும் என நம்பப்படுகிறது.

