தீர்வை எதிர்பார்க்கும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்

தமது கோரிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, தமது பிரச்சினைகளுக்கு இன்று (02) அல்லது நாளை (03) தீர்வை வழங்குவதற்கு அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவின் இணைத்தலைவர் தம்மிக்க பிரியந்த தெரிவித்துள்ளார்.

அமைச்சருடன் செய்துகொண்ட உடன்படிக்கைக்கு அமைய தொழிற்சங்க நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், 2017 ஆம் ஆண்டு அங்கீகாரம் பெற்ற மாதாந்த கொடுப்பனவை எமக்கு வழங்குவதற்கும், அமைச்சரவையில் இந்த விடயத்தை முன்வைத்து அதற்கான தீர்வை விரைவில் வழங்குவதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தினால், இன்று மாலைக்குள் தீர்வு கிடைக்கும் என தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஏதேனும் ஒருவகையில் சாதகமான தீர்வு வழங்கத் தவறும் நிலையில், தொழிற்சங்க நடவடிக்கை நிச்சயம் தொடருமென தம்மிக்க பிரியந்த மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin