யாழில் பொலிஸார் துரத்திச் சென்ற இளைஞர் பலி

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் பொலிஸார் விரட்டிச் சென்ற நபரொருவர் மின்கம்பத்தில் மோதுண்டு இன்று இரவு உயிரிழந்துள்ளதால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் அப்பகுதியில் பொதுமக்கள் கூடியதால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை இடை மறித்துள்ளனர்.

எனினும் அவர் நிறுத்தாது பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து பொலிஸ் அதிகாரிகள் குறித்த நபர் பயணித்த மோட்டார் வண்டியை உதைந்து விழுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் மேட்டார் சைக்களில் பயணித்த நபர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்தார் என பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin