ஸ்பெயினின் Aragón பகுதியில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ, 1,000 ஆண்டுகள் பழமையான San Juan de la Peña மடாலயத்தை நெருங்கியது.
10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த வரலாற்றுச் சின்னத்தில், Aragón-ன் ஆரம்பகால மன்னர்களின் எச்சங்கள் பாதுகாக்கப்பட்டிருந்தன.
தீ வேகமாக நெருங்கியதால், மீட்புக் குழுவினர் கடைசி நேரத்தில்:
மன்னர்களின் எலும்புகள் மற்றும் மண்டையோடுகள்
பழமையான கலைப்பொருட்கள்
வரலாற்றுச் சின்னங்கள்
ஆகியவற்றை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர்.
தீ பாதித்த பகுதியில் 10,000 ஹெக்டேருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 850 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு ஸ்பெயினில் ஏற்கனவே 283,000 ஹெக்டேருக்கும் அதிகமான நிலம் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய தரவுகள் தெரிவிக்கின்றன.
1,000 ஆண்டுகள் பழமையான வரலாறு… சில நிமிடங்களில் தீயில் அழியும் அபாயம்!
காலநிலை மாற்றமும் தீவிர வெப்பமும் ஐரோப்பாவின் வரலாற்றுச் சின்னங்களுக்கும் அச்சுறுத்தலாக மாறுகிறதா?
இந்த வரலாற்றுச் சின்னத்தை காப்பாற்றிய மீட்புக் குழுவினருக்கு கொடுப்பீர்களா?

