‘பாகுபலி: கிரவுன் ஒப் ப்ளட்’ வெப்சீரிஸாக மாறிய திரைப்படம்

இயக்குநர் இராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், ராணா, சத்யராஜ் ஆகியோர் நடித்து கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி பட்டி தொட்டியெங்கும் ஹிட்டான திரைப்படம் பாகுபலி.

இந்நிலையில் இத் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறிருக்க பாகுபலி இரசிகர்களுக்கு இன்னுமொரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.

அது என்னவென்றால் பாகுபலி படத்தின் முன் கதை, ‘பாகுபலி: கிரவுன் ஆப் ப்ளட்’ என்ற தலைப்பில் வெப் சீரிஸாக, எதிர்வரும் 17ஆம் திகதி டிஸ்னி ஹொட் ஸ்டாரில் வெளியாகிறது.

பாகுபலி, பல்வால் தேவனின் வாழ்க்கையில் யாரும் அறியாத திருப்பங்கள் இந்த வெப் சீரிஸில் வெளிவரவுள்ளது.

தற்போது இதன் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

Recommended For You

About the Author: admin