கைதான இந்திய மீனவர்கள் 22 பேருக்கு விளக்கமறியல்

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் (09) 22 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

மீனவர்களின் 3 படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டன.

பின்னர் 22 மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Recommended For You

About the Author: admin