தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்க விரும்புகிறதா இந்தியா?

“தமிழ்க் கட்சிகளின் பிளவு வருத்தமளிக்கின்றது. இந்தக் கட்சிகள் மேலும் பிளவடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.” என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்திஜீவிகள் உள்ளிட்ட சிலரை நேற்று இரவு யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போதே தமிழ் கட்சிகளின் பிளவு ஆபத்தானது என்றும் பிளவுகளை சரி செய்யப்பட்டு அரசியல் பயணங்கள் தொடர வேண்டும் என்றும் சந்தோஷ் ஜா சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் அரசியல்வாதிகள் ஒவ்வொருடனும் தனித்தனியே இந்தியத் தூதுவர் கலந்துரையாடியுள்ளார்.

இருக்கின்ற தமிழ்க் கட்சிகள் மேலும் பிளவடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் சந்தோஷ் ஜா ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

இந்தியத் தூதுவர், வடக்கில் தமிழ் கட்சிகளை சந்தித்துள்ளமையின் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் இந்தியா அக்கறை கொண்டுள்ளதை வெளிப்படுத்துவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: admin