யால சரணாலயம் மற்றும் கதிர்காமத்தில் கஞ்சா பயிர்ச்செய்கை

மொனராகலை யால சரணாலய குபுக்கன் ஓயாவிற்கு அருகில் நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த கஞ்சா பயிர்செய்கை ஒன்றை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மொனராகலை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி சுற்றிவளைத்தனர். இச்சுற்றிவளைப்பின் போது அறுவடைக்கு தயாராக இருந்த... Read more »

ஜனாதிபதி தேர்தலில் சம்பிக்க ரணவக்க

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை வலுவான அடித்தளத்தின் ஊடாக வேட்பாளராக நிறுத்த வேண்டும் என அந்த கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் சட்டத்தரணி சிரால் லக்திலக்க தெரிவித்துள்ளார். சமூக, பொருளாதார, அரசியல் போன்ற பல நெருக்கடிகளுக்குள்... Read more »
Ad Widget Ad Widget

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர், யுவதிகள்

மியன்மாரில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் குழுவொன்றினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் 56 இலங்கைப் பிரஜைகளை விடுவிப்பதற்கு உதவுமாறு தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசினிடம் (Srettha Thavisin) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கும் வகையில் அவர் இலங்கைக்கு விஜயம்... Read more »

இந்தியா செல்கிறது தமிழரசுக் கட்சி

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (Ilankai Tamilarasu party) தலைவர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் வடக்கின் சில தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக அறிய முடிகிறது. இந்திய தலைநகர் புதுடெல்லியில் விரைவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் அறிய... Read more »

சவுதி அரேபியாவில் கடுமையான துஷ்பிரயோகத்துக்கு ஆளான இலங்கை பெண்

சவூதி அரேபியாவில் வேலை தேடிச் சென்ற இலங்கை வீட்டுப் பணிப்பெண் ஒருவர் கடுமையான துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதைக்கு ஆளாகியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில், குமுதினி சந்தியா குமாரி செனவிரத்ன என்ற பெண்ணே மேற்படி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டில் சிறந்த... Read more »

நிறைவேற்று அதிகாரத்திற்கும் அரசியலமைப்பு பேரவைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள சிக்கல்

நிறைவேற்று அதிகாரத்திற்கும், அரசியலமைப்பு பேரவைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள சிக்கலை தாமதமின்றி தீர்த்துக்கொள்ளுமாறு நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவர் கரு ஜயசூரிய அறிக்கை ஒன்றின் மூலம் கோரிக்கை விடுத்து்ளளார். அரசியலமைப்பு பேரவைக்கும் இருக்கும் அதிகாரம் தொடர்பாக ஏதோ ஒரு கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தென்படுவது... Read more »

ஹெய்டியில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

ஹெய்டியில் ஜனாதிபதி அரியல் ஹென்ரியின் அரசாங்கத்தை எதிர்த்து நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஜனாதிபதி ஹென்ரியின் ஆட்சியில் தலைநகர் போர்ட் ஒவ் பிரின்சில் சட்டவிரோத ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. தலைநகரில் ஆயுதக்குழுக்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இடங்கள் விரிவடைந்துள்ளன. தலைநகர்... Read more »

இந்தியாவில் பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்து: அறுவர் பலி, 60 பேர் காயம்

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் பாரிய வெடி விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் குறைந்தது 6 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 60 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீ விபத்தானது அருகிலுள்ள பல கட்டிடங்களுக்கும்... Read more »

கெஹலிய பதவி விலகினார்

சுற்றாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை இன்று ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்துகளை அதிக விலையில் இலங்கைக்கு கொள்வனவு செய்ய அனுமதியளித்த குற்றச்சாட்டில்... Read more »

“கிராமி” விருது கோப்பையில் மது அருந்திய பிரபல பாடகர்: சர்ச்சை

இசைத்துறையின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் கிராமி விருது விழாவில், டாக்டர் டிரே குளோபல் இம்பாக்ட் விருதைப் வென்ற அமெரிக்கா ராப் இசைக் கலைஞர் “ஜெய் இசட்” தனது விருது கோப்பையில் மது அருந்திய வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இசைக் கலைஞர்களை... Read more »