95 இலட்சம் ரூபா தரகுப்பணம் : இத்தாலி செல்ல முயன்ற இலங்கையர் கைது

போலியான ஆவணங்களை பயன்படுத்தி இத்தாலிக்கு செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.   திருகோணமலையைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் ஒருவரே நேற்று (06) பிற்பகல் இவ்வாறு கைது... Read more »

ஜீவனின் மன்னிப்பு கோரும் முயற்சியை நிராகரிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் போது மேற்கொள்ளப்பட்ட கட்டாய தகன (ஜனாசா தகனம்) நடவடிக்கைக்காக அரசாங்கத்தை முறையாக மன்னிப்பு கோரவைக்கும் நீர் வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் முயற்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.   கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய... Read more »
Ad Widget

பொதுத் தேர்தல் களத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலை மையப்படுத்தி அரசியல் கட்சிகள் தமது நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றன. இருப்பை தக்கவைப்பதற்காக பல்வேறு மட்டத்தில் அரசியல் கூட்டணிகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று மக்களின் வாக்கு வங்கியை பெறுவதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், எதிர்வரும்... Read more »

ராஜபக்சவினரின் அரசியல் முடிந்துவிட்டது என்கிறார் விமல் எம்.பி

நாட்டில் ராஜபக்சவினரின் அரசியல் முடிந்துவிட்டதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அத்துடன், நாமல் ராஜபக்ச கட்டாய அறுவைச் சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்ட அரசியல் குழந்தை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே... Read more »

நீதிமன்றுக்குள் நிழலாடப் போகிறதா தமிழரசுக் கட்சி?

உரத்துப்பேசினால் உண்மையுமில்லை அதட்டிப்பேசினால் அர்த்தமுமில்லை நிமிர்ந்து பேசினால் நேர்மையுமில்லை ஆகவே அறிந்து, ஆராய்ந்து, தெளிந்து, தீர்க்கமாக, நிதானமாக வார்த்தையை உதிரவேண்டும. இல்லையேல் வீசிய அம்பே எம்மைக் குறிபார்க்கும். கனவுகளுடன் காற்றில் கத்திச் சண்டை நடாத்தில் பயனில்லை. நீள் நினைவுகளுடன் நீசமற நிலைத்து எழவேண்டும் ஒப்புக்குச்சப்பு... Read more »

ரணில், சஜித் மற்றும் அநுர நேரடி விவாதத்திற்கு அழைப்பு

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் நிச்சயமாக களமிறங்குவார்கள் என்பது பகிரங்கமான உண்மை. எதிர்வரும் ஒக்டோபர்... Read more »

இராணுவத்திற்கு பாராபட்சம் காட்டும் அரசாங்கம்

நாட்டுக்காக அளப்பரிய சேவையாற்றிய இராணுவ வீரர்களுக்கு அரசாங்கம் மாற்றாந்தாய் கவனிப்பை செயற்படுத்தி வருவதாக எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் இராணுவ வீரர்களது மாவட்ட மாநாடு மாத்தளையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை... Read more »

சட்டவிரோதமாக தங்கியுள்ள அமைச்சர்கள்: வெளியேற்ற நடவடிக்கை என்ன?

அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகப்பூர்வ இல்லங்களில் சட்டவிரோதமான முறையில் தங்கியுள்ள அமைச்சர்கள் மூவரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களின் குடியிருப்பு வீடுகளை கையாளும் பிரிவு இது தொடர்பில் அமைச்சின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். குறித்த 03 அமைச்சர்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு... Read more »

மோசடி தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக செல்லும் போது திருடர்கள்,மோசடி செய்பவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். போலி நாணயத் தாள்கள் புழக்கத்தில் இருப்பதால், நுகர்வோர் மற்றும் வர்த்தகர்கள் கவனமாக இருக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்... Read more »

மலைநாட்டு நடனக் கலையைப் பாதுகாக்க குழு நியமிப்பு

மலைநாட்டு நடனக் கலையைப் பாதுகாத்து, தொடர்ந்து பேணுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கலாச்சார அலுவல்கள் அமைச்சு, கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் உள்ளிட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி நியமிக்கப்படும் இந்தக் குழுவில் கண்டி... Read more »