பொதுத் தேர்தல் களத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலை மையப்படுத்தி அரசியல் கட்சிகள் தமது நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றன.

இருப்பை தக்கவைப்பதற்காக பல்வேறு மட்டத்தில் அரசியல் கூட்டணிகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

அதேபோன்று மக்களின் வாக்கு வங்கியை பெறுவதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் மூவர் களமிறங்கவுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த மூவரும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து அரசியல் பயணத்தை தொடரவுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் யார் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு களமிறங்கும் மூவரில் ஒருவர் பிரபல வேகப்பந்து வீச்சாளர் எனவும், பல்வேறு சர்வதேச சாதனைகளை புரிந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அவர் கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி களமிறங்குவது குறித்து ஆலோசித்து வருவதாகத் தெரியவருகிறது.

Recommended For You

About the Author: admin