பீரிஸ் உள்ளிட்ட உறுப்பினர்கள் சஜித் அணியுடன் இணைவு

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (சமகி ஜன பலவேகய) மற்றும் அந்த கட்சியுடன் இணைந்து செயற்படும் கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய கூட்டணியின் முதல் கட்ட நகர்வாக இந்த விடயம் பார்க்கப்படுகிறது. எதிர்வரும்... Read more »

சரணடைந்த போராளிகளின் தகவல்களை வெளியிட இராணுவத்திற்கு கால அவகாசம்

இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு ஊடகவியலாளர் ஒருவர் விடுத்த கோரிக்கைக்கு எதிராக எழுத்துமூல ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு இராணுவம் நீதிமன்றத்திடம் கால அவகாசம் கோரியுள்ளது. தகவலறியும் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு எதிராக ஊடகவியலாளர் பி.நிரோஷ்குமார், மேன்முறையீட்டு நீதிமன்றில்... Read more »
Ad Widget

அடுத்தடுத்து நெருக்கடியை சந்திக்கும் மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளராக செயற்படுகின்றமை கட்சியின் யாப்பை மீறும் செயல் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை வகிப்பதற்கு மைத்திரிபால சிறிசேன தகுதியற்றவர் என கூறி பதவி நீக்கலுக்கான... Read more »

தென் மாகாணத்தை ஆக்கிரமிக்கும் ரஷ்ய, உக்ரேனிய பிரஜைகள்

ரஷ்ய மற்றும் உக்ரேனிய பிரஜைகள் தென் மாகாணத்தில் சுற்றுலா விசாவில் தங்கி பல்வேறு தொழில்களை செய்வதன் மூலம் ஆபத்தான சூழ்நிலைகள் ஏற்படலாம் என அரச கணக்குகள் குழு (COPA) வெளிப்படுத்தியுள்ளது. கோபா குழு அதன் தலைவரான இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையில் நாடாளுமன்றத்தில்... Read more »

ஊடுருவப்பட்ட கல்வி அமைச்சின் இணையத்தளம்

கல்வி அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் ஊடுருவப்பட்டுள்ளதாக தகவலொன்று வெளியாகியுள்ளது. அடையாளம் தெரியாத நபரொருவரால் இணையத்தளம் ஊடுருவப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சின் இணையத்தளத்தில் காணப்படும் பாதுகாப்பு குறைபாடுகளை கவனத்திற்கொண்டு தாம் ஊடுறுவியதாக குறித்த நபர் இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார், “எனது பெயர் “Anonymous... Read more »

விடுதலையின் பின்னணி: அரசியல் காய்நகர்த்தல்கள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளின் விடுதலையானது இந்திய தேர்தலில் இருபக்க விளைவுகளை ஏற்படுத்தவுள்ளது. பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட நிலையில், கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுவருகின்றன. தமிழகத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகள் கடந்த 30 ஆண்டுக்கு... Read more »

ரணிலே வேட்பாளர்: ராஜபக்சர் தரப்பு உத்தரவாதம்

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தலை நடத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றி நாடாளுமன்றத்தை கலைக்க முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி முற்றாக தோல்வியடைந்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் வட்டாரங்களில் அறிய முடிகிறது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவது அரசியல்... Read more »

மைத்திரியின் தலைவர் பதவிக்கு வந்த சோதனை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை இன்று பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு ஏப்ரல் 18ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க செய்த... Read more »

ஜெனீவாவில் பிணை எடுப்பு- சம்பந்தனுக்கு கௌரவ சொகுசு இல்லம்

2019இல் , எதிர்க்கட்சி தலைவராகப் பதவி வகித்திருந்த ஆர். சம்பந்தன் அப் பதவியிலிருந்து விலகி சுமார் ஆறு வருடங்கள் கடந்த போதிலும், எதிர்கட்சி தலைவருக்கு உரித்தான கொழும்பு 7, மஹகமசேகர மாவத்தையில் (Mahagama Sekara) காணப்படும் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று வரை தொடர்ந்தும் வசித்துவருவதாக... Read more »

தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு விக்கி கூறும் பதில்

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டால், வஜிர அபேவர்தன கூறுவதுபோல் தமிழர்களின் வாக்குகள் பிளவுபடாது.” – இவ்வாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழர் தரப்பு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது... Read more »