திருமலை எண்ணெய் குதங்கள் தனியார் நிறுவனத்துக்கு

திருகோணமலையில் உள்ள 99 எண்ணெய் குதங்களில் 61 எண்ணெய் குதங்களை திருகோணமலை பெற்றோலிய முனைய தனியார் நிறுவனத்துக்கு 50 வருடகாலத்திற்கு குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2022.01.03ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டவாறு குறித்த எண்ணெய் குதங்களை வழங்க கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில்... Read more »

இந்தியாவை துவசம் செய்தது தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 153 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. இதில் இந்திய அணியின் இறுதி ஆறு விக்கெட்டுகளும் வெறும் 11 பந்துகளில் வீழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கேப்டவுனில் இடம்பெறும் இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி நாணய... Read more »
Ad Widget

‘2024’ சவால்மிக்க ஆண்டு: அனைவரும் தியாகம் செய்ய வேண்டியுள்ளது

2023ஆம் ஆண்டை போன்று 2024ஆம் ஆண்டில் பொருளாதார சவால்கள் தொடரும். இந்த சவால்கள் 2027ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என அமைச்சர் பந்துல குணவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தின் தலைமையில் 2023 இல் இலங்கையின் பொருளாதாரம் முக்கியமான திருப்புமுனையை அடைந்துள்ளதாகவும்... Read more »

மீண்டும் மக்கள் போராட்டங்கள் வெடிக்கும் : முன்னாள் ஜனாதிபதி

நாட்டை மீட்பதற்கான வேலைத்திட்டத்தை உருவாக்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக சர்வக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் பொருட்கள், சேவைகளின் விலைகள் அதிகரித்துள்ளன. மக்கள்மீது பொருளாதார... Read more »

இணைய மோசடியில் இலங்கையர்கள்: மியன்மார் அரசின் உதவியை நாடியது இலங்கை

மியன்மாரில் இணைய மோசடியாளர்களின் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு அந்நாட்டு அரசாங்கத்தின் அவசர தலையீடு மற்றும் உதவியை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மியன்மாரின் பிரதிப் பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சருடன், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று பிற்பகல்... Read more »

யாழில் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம் தடுக்ககோரிய மனு நிராகரிப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை தடுக்கக் கோரி யாழ்ப்பாண பொலிஸார் விடுத்திருந்த கோரிக்கையை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சட்டத்தை மீறாத வகையில், ஜனநாயக ரீதியில் எதிர்ப்பில் ஈடுபடுவதற்கான உரிமை உள்ளதாகவும் நீதிமன்றம் இதன்போது அறிவித்துள்ளது. ஜனாதிபதி... Read more »

நோபல் பரிசு பெற்றவருக்கு சிறைத்தண்டனை

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுசுக்கு பங்களாதேஷில தொழிலாளர் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யூனுஸ் தலைவராக இருக்கும் கிராமீன் டெலிகொம் நிறுவனத்தின் ஊழியர்களின் விடுமுறை மற்றும் நலனைக் குறைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டதால் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது 83... Read more »

சேனா புழுவால் சோளப்பயிர் செய்கை பாதிப்பு

அநுராதபுரம் – நொச்சியாகம – தல்கஸ்வெவ பிரதேசத்தில் சுமார் 250 ஏக்கர் சோளச் செய்கை சேனா புழு அச்சுறுத்தல் காரணமாக நாசமாகியுள்ளது. இதற்கு முன்னர் ஆரம்ப நிலையிலிருந்த மக்காச்சோளச் செய்கை நடும் வரை மட்டுமே சேனாபுழு சேதம் ஏற்பட்டிருந்த நிலையில், இம்முறை முழு சோள... Read more »

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும்

இவ்வருடம் 23 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்துவரத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன் மூலம் 4.6 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டுவது தமது எதிர்பார்ப்பு என அதன் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கடந்த வருடம்... Read more »

மட்டு கள்ளியங்காடு மயானத்தில் சடலம்

மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்திலுள்ள கட்டிடத்தின் கூரையில் அங்கு கடமையாற்றிவரும் ஆண் ஒருவர் இன்று(03) பகல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இருதயபுரம் இரண்டாம் குறுக்கு வீதியை சேர்ந்த 47 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.... Read more »