மீண்டும் மக்கள் போராட்டங்கள் வெடிக்கும் : முன்னாள் ஜனாதிபதி

நாட்டை மீட்பதற்கான வேலைத்திட்டத்தை உருவாக்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக சர்வக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் பொருட்கள், சேவைகளின் விலைகள் அதிகரித்துள்ளன. மக்கள்மீது பொருளாதார சுமைக திணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலைமையில் இருந்து மக்களை மீட்பது பற்றி சிந்திக்க வேண்டும். அவ்வாறு இல்லையேல் கடும் அதிருப்தியில் மக்கள் எவ்வாறான முடிவை எடுப்பார்கள் என தெரியவில்லை.

நாட்டை மீட்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து நிலைமையை தெளிவுபடுத்த வேண்டும்.

நாட்டை மீட்பதற்கான அரசியல் வேலைத்திட்டமும், ஏனைய தரப்புகளின் வேலைத்திட்டங்களும் முன்வைக்கப்பட்டு காத்திரமான முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

எந்தவொரு கட்சியாலும் தனித்து செயற்பட்டு இந்த நாட்டை மீட்க முடியாத சூழ்நிலையே காணப்படுகின்றது.

எனவே, அனைத்து தரப்புகளும் இணைந்து வட்டமேசை பேச்சுவார்த்தையை நடத்தவேண்டும். ஒரு இணக்கமாக தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் மக்கள் மீண்டும் கிளந்தெழுவார்கள். அதனை எவராலும் தடுக்க முடியாது” என தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin