சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும்

இவ்வருடம் 23 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்துவரத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன் மூலம் 4.6 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டுவது தமது எதிர்பார்ப்பு என அதன் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் 15 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்கு திட்டமிடப்பட்டிருந்ததாகவும், ஆனால் அந்த வருடம் 14 இலட்சத்து 89,000 சுற்றுலாப் பயணிகளே இலங்கைக்கு வந்ததாகவும் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: admin