கடந்த 18ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த அஹுங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரின் சடலம் நேற்று (20) பலபிட்டிய, மங்கட கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 29 வயதுடைய இரண்டு இரட்டைக் குழந்தைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளைப்... Read more »
நானுஓயாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த டிக்கிரி மெனிகே பயணிகள் ரயில் தடம்புரண்டுள்ளது. ஹட்டன் மற்றும் கொட்டகலை புகையிரத நிலையங்களுக்கு இடையில் சிங்கமலை புகையிரத சுரங்கப்பாதைக்கு அருகில் 109 ¼ மைல் கல்லூக்கு அருகில் தடம் புரண்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. இன்று... Read more »
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீண்டும் தரையிறக்கப்பட்டது. 201 பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் புறப்பட்ட பத்து நிமிடங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்தே... Read more »
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றவாளி என கடந்த செவ்வாய்கிழமை அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். மேலும், இலஞ்ச ஒழிப்பு பொலிஸார் வழக்கில் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது. பொன்முடியும், அவரது மனைவியும் வருமானத்துக்கு அதிகமாக... Read more »
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பு இன்று பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது என்று அழைப்புக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான... Read more »
யாழ்ப்பாணத்தில் வாட்ஸ் அப் செயலி ஊடாக போதைபொருள் வியாபாரம் நடைபெற்று வந்தமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் கைதானவர்களில் இருவரை பொலிஸார் நீதிமன்ற அனுமதி பெற்று தடுப்பு காவலில் வைத்து... Read more »
ஆண்ட்ராய்ட் தொலைபேசிகளை பொருத்தவரை செயலிகளை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் அந்த நிறுவனங்களின் தளங்களில் நேரடியாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம். இவைதான் அதிகாரப்பூர்வமான, முறையான செயலிகளாக பார்க்கப்படுகின்றன. வேறு மூன்றாம் தர பிரௌசர்களில் இருந்தோ அல்லது கூகுள் தேடலின் மூலமோ தரவிறக்கம் செய்யப்படும் செயலிகள் உங்கள்... Read more »
கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 17 பொலிஸ் நிலையங்களின் பிரதேசங்களில் கடந்த மூன்று வருடங்களுக்குள் 16 வயதுக்கு குறைந்த சிறுமிகள் 132 பேர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் வைத்தியரான சட்டத்தரணி பாலித பண்டார சுபசிங்ஹ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்து... Read more »
இந்தியாவின் பெரிய வெங்காய ஏற்றுமதித்தடை மேலும் ஐந்து மாதங்களுக்கு நீக்கப்படமாட்டாது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2024 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் வரை இந்தியாவில் வெங்காய விலையை குறைவாக வைத்திருக்க மோடி அரசாங்கம் தீர்மானித்தது. இதன் காரணமாகவே இந்தியாவில்... Read more »
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிருவதற்கான வேட்பாளர்கள் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பரிசீலித்து வருகிறது. கொழும்பில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்படி, தமது கட்சியில் நான்கு... Read more »

