கேரளா கஞ்சா ரகத்தை இலங்கையில் பயிரிட்டிருந்த ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக தணமல்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர். தணமல்வில பிரதேசத்தில் இப்படியான கஞ்சா செய்கை பிடிப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என தெரியவந்துள்ளது. தணமல்வில கங்கே யாய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் சோளப் பயிர் செய்கை... Read more »
யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிய தீவுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையங்களை நிர்மாணிப்பதற்காக இந்திய அரசாங்கம் 11 மில்லியன் டொலர் மானியத்தை வழங்கியுள்ளது. யாழ்.குடாநாட்டின் டெல்ஃப், நயினாதீவு மற்றும் அனலத்தீவு ஆகிய தீவுகளில் வசிக்கும் மக்களுக்கு மின்சாரம் வழங்கும் நோக்கத்திற்காக இந்திய அரசாங்கம் இந்த மானியத்தை வழங்கியுள்ளது.... Read more »
கனடாவில் காணாமல் போன குடும்பத்தார் அனைவரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். அல்பர்டாவின் Lac Ste. Anne County-ஐ சேர்ந்த கெல்லி (39), இவர் மனைவி லாரா (37), மகன் டைலன் (8) ஆகிய மூவரும் கடந்த 25ஆம் திகதி காணாமல் போனார்கள். இந்த நிலையில் மூவரும்... Read more »
2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி நாடு முழுவதும் பிரசாரக் கூட்டங்களை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி 19ஆம் திகதி கொழும்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டு பிரதான கூட்டமொன்றை நடத்திய பின்னர் நாடு பூராகவும் கூட்டங்களை... Read more »
பெரிய வெங்காயத்தின் விலை மேலும் குறைவடையும் என பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனை அடிப்படையாக கொண்டு பாகிஸ்தானிலிருந்து இந்த வாரம் பெருமளவு பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டவுள்ளதுடன், அடுத்த மாதம் சீனா மற்றும் நெதர்லாந்திலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்படவுள்ளது. இதன்காரணமாக பெரிய... Read more »
இரண்டு விளையாட்டு சங்கங்கள் மற்றும் மூன்று விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகளை தற்காலிகமாக இடைநிறுத்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 1973 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டம் திருத்தம் மற்றும் 32 ஆவது சரத்தின் கீழ் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்... Read more »
ஜனாதிபதித் தேர்தலை வழிநடத்தும் விசேட சபையொன்றை அடுத்தவாரம் ஐக்கிய தேசியக் கட்சி நியமிக்க உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் ஐ.தே.கவின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் கடந்த சில நாட்களாக இடம்பெற்று வருகிறது. புதிய வருடத்துடன், கட்சியை வழிநடத்தும் வகையில் இந்த தலைமைத்துவ சபை... Read more »
அடுத்த தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதை தவிர எதிர்க்கட்சி செல்லவோ அல்லது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறவோ எந்த எதிர்பார்ப்பும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். கிரிந்திவெலயில் நடைபெறும் கல்வி... Read more »
2024ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறைகள் பற்றிய வர்த்தமானி அறிவித்தலை பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது. பொது விடுமுறைகள் அடங்கிய வர்த்தமானியின் பிரகாரம் 25 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கள மொழியில் வெளியாகியுள்ள வர்த்தமானி அறிவித்தல் இதோ…… Read more »
டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான இளைஞன், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் அச்சுவேலி தோப்பு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் சாரூரன் (வயது 23) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான நிலையில், அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா... Read more »

