பிரதமர் மோடியை கவர்ந்த தமிழ் சிறுமியின் பாடல்

டெல்லியில் நடந்த பொங்கல் விழாவில், பிரதமர் நரேந்திரமோடி முன்னிலையில் ‘சத்தியம் சிவம் சுந்தரம்’என்ற பாடலை பாடி அசத்தியுள்ளார் அண்மையில் நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன்-9 இல் வெற்றியீட்டிய ஸ்ரீநிதா. இவரது குரல் வளத்தையும் இனிமையையும் பாராட்டிய மோடி, “மிக அருமையாக பாடினாய்.... Read more »

புதுக்குடியிருப்பு பகுதியில் விட்டுச்செல்லப்பட்ட மர்மப் பொதி

புதுக்குடியிருப்பில் மர்மமான முறையில் கைவிடப்பட்டுச் சென்ற பொதி ஒன்றினை பொலிஸார் மீட்டெடுத்த சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மல்லிகைதீவு காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் பொதி ஒன்றினை யாரோ விட்டுச்சென்றுள்ளனர். இது குறித்து வழங்கப்பட்ட தகவலையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய... Read more »
Ad Widget

இலங்கை-இந்திய பயணிகள் படகு சேவை இந்த வாரம் மீளவும் ஆரம்பம்

தமிழகம் நாகப்பட்டினத்திற்கும் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் படகுச் சேவை இந்த வாரம் ஆரம்பிக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.எஸ்.எச்.ஜே. இலுக்பிட்டிய தெரிவித்தார். இதுவரை சேவையை ஆரம்பிக்க தேவையான ஆரம்ப வேலைத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், குடிவரவு அதிகாரிகள் ஏற்கனவே... Read more »

தமிழ் தேசியத்தை சீர்குலைக்கும் தலைவரை மக்கள் ஏற்கமாட்டார்கள்: சீனிதம்பி யோகேஸ்வரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்படும் பட்சத்தில் தமிழ் தேசியத்திற்கு பாதிப்பு ஏற்படும் என முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார் இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய... Read more »

ஒக்டோபர் 18ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல்

ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதிக்கு ஒருமாதத்திற்கு முன்னர் நடத்த வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு செய்துவருவதாக ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நாட்டில் பல்வேறு கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. அரசாங்கம் தேர்தலை ஒத்திவைக்க... Read more »

யாழ். ராணியுடன் மோதி விபத்து: இளம் குடும்பஸ்தர் பலி

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் புகையிரத விபத்தில் சிக்கி இளம் குடும்பஸ்தர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ். ராணி புகையிரதத்துடன் மோதுண்டே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் முறிகண்டி பகுதியை சேர்ந்த... Read more »

போராட்டத்தை முன்னெடுத்த சுகாதார ஊழியர்கள்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூளியர்களின் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று இடம்பெற்றது. வைத்தியர்களுக்கு வழங்கிய 35000 ரூபா கொடுப்பனவை அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் சமமாக வழங்கவேண்டும் மற்றும் பதவி உயர்வு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த போராட்டத்தில் 200க்கு மேற்பட்ட... Read more »

கூட்டமைப்பை மக்கள் நிராகரிக்கின்றார்கள்: விநாயகமூர்த்தி முரளிதரன்

தமிழ் மக்களின் இருப்புக்களை தக்கவைக்க வேண்டுமாக இருந்தால் தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் பதவி பட்டங்களை துறந்துவிட்டு ஒரு குடையின் கீழ் அணிதிரண்டு, தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். அத்துடன், எங்களுடைய பலவீனங்களை எதிரிகள்... Read more »

தம்மிக்க பெரேராவுடன் எவ்வித உடன்பாடும் இல்லை

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் எந்தவொரு உடன்பாடும் செய்துக்கொள்ளப்படவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அனுபவமற்ற ஜனாதிபதியை நியமித்து நாட்டை மீண்டும் சிக்கலில் தள்ள முடியாது எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.... Read more »

யாழில் அதிகரிக்கும் டெங்கு : பல வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

யாழ்ப்பாணம் பகுதியிலுள்ள பல வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் அதிகரித்துவரும் டெங்கு நோய் பாதிப்பையடுத்து யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தாக்கம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து இன்று வியாழக்கிழமை (18) இன்று வியாழக்கிழமை (18) நல்லூர் சுகாதார... Read more »