லக்கல புதிய நகர குடிநீர் திட்டம் இன்று மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு!

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்ட ‘லக்கல புதிய நகர குடிநீர் திட்டம்’ இன்று (12) அமைச்சர் சுசில் ரணசிங்க தலைமையில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவுள்ளது.

இப்பகுதி மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சனைக்கு தீர்வாக இத்திட்டம் அமைந்துள்ளது.

இதன் மூலம் லக்கல பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 21 கிராம நிலதாரி பிரிவுகளைச் சேர்ந்த 6,500 குடும்பங்களைச் சேர்ந்த 25,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சுத்தமான குடிநீரைப் பெறுவர்.

பாதுகாப்பான குடிநீரைச் சீராக வழங்குவதன் மூலம், இப்ப பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் சுகாதாரத்தையும் கணிசமாக உயர்த்த இத்திட்டம் பெரிதும் உதவும்.

Recommended For You

About the Author: admin