வெளிநாட்டுச் செலுத்தல்களின் போது ஹேக்கர்களால் (Hackers) திருடப்பட்ட 2.5 மில்லியன் டாலர்கள் குறித்து இன்னும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
அமைச்சர் அறிக்கை: இத்தகவலை அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ ஊடகவியலாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பான விவரங்கள் நீதிமன்றத்தில் அறிக்கை செய்யப்பட்டுள்ளதுடன், கணினி குற்றப்பிரிவு மற்றும் மத்திய வங்கி (Central Bank) உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து இந்த பணத்தைத் தேடும் விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.

