இன மத அடையாளங்கள் மாற்றியமைப்பு; ஆட்சியாளர்களைத் தடுத்து நிறுத்த சர்வமத தலைவர்களிடம் கோரிக்கை

பல்லின மக்கள் வாழும் நாட்டில் ஒவ்வொரு இனத்தினதும் இன மற்றும் மத அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதுவே ஜனநாயகம். இதனை மாற்றியமைக்கும் ஆட்சியாளர்களைத் தடுத்து நிறுத்த சர்வமதத் தலைவர்கள் முன்வர வேண்டும் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் புராதன பஞ்ச ஈச்சரங்களில் பாடல் பெற்ற தலம் திருமலையில் அமைந்துள்ள திருக்கோணேஸ்வரம் சிவாலயம் எல்லோரும் அறிந்த வரலாற்றுப் பெருமைகளைக் கொண்டது.

இவ்வாறு இருக்கையில் திட்டமிட்டு இலங்கை அரசாங்கம் அதன் வரலாற்றை மாற்றியமைக்க மேற்கொள்ளும் முயற்சியைத் தடுக்க சர்வமதத் தலைவர்கள் தலையிடாமல் இருப்பது ஏன்? மௌனம் காப்பது நல்லதல்ல என சைவ மக்கள் வேதனைப்படுகின்றனர் என்றும் சபா குகதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோணேசர் கோயில் வளாகத்தில் கடைகள் அமைக்கும் வேலைத்திட்டம் விரிவடைந்து கடலை நோக்கி அமைந்துள்ள கோவிற் பகுதியின் கீழ் உள்ள கடற்பகுதியை ஆய்வு என்ற போர்வையில் அகழ்ந்து எடுப்பதற்கு தொல்லியல் திணைக்களம் முயற்சிக்கின்றது.

இது திட்டமிட்ட சதி நடவடிக்கையாக அரச பின்புலத்தில் நிகழ்த்தப்படுகின்றது.

பல்லின மக்கள் வாழும் நாட்டில் ஒவ்வொரு இனத்தினதும் இன மற்றும் மத அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

அதுவே ஜனநாயகம். இதனை மாற்றியமைக்கும் ஆட்சியாளர்களைத் தடுத்து நிறுத்த சர்வமதத் தலைவர்கள் முன்வர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor