சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து 22 வயது கல்கமுவை யுவதி உயிரிழப்பு.!

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து 22 வயது கல்கமுவை யுவதி உயிரிழப்பு.!

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதில், சமையலில் ஈடுபட்டிருந்த இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சோக சம்பவம் குருநாகல், கல்கமுவை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

கல்கமுவை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று (28) தனது வீட்டின் சமையல் அறையில் மதிய உணவைத் தயார் செய்துகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக எரிவாயு சிலிண்டர் வெடித்துள்ளது.

இந்த வெடிப்புச் சம்பவத்தின் போது ஏற்பட்ட கடும் தீக்காயங்கள் காரணமாக அந்த யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சமையல் அறையிலுள்ள எரிவாயு அடுப்பு அல்லது குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகின்றது.

இது தொடர்பான விரிவான விசாரணைகளைப் பொலிஸார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin