சுயாதீன ஊடகவியலாளரின் நான்காம் ஆண்டு நினைவேந்தல்..!

சுயாதீன ஊடகவியலாளரின் நான்காம் ஆண்டு நினைவேந்தல்..!

கொரோனா தொற்றுக்குள்ளாகி மறைந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் நான்காவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ் ஊடக அமையத்தில் 02/08 செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

கொடிகாமத்தைச் சேர்ந்த பிரகாஸ் தனது ஏழாவது வயதில் தசைத்திறன் குறைபாடு (Muscular Dystrophy) நோயினால் பாதிக்கப்படதால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.அதனால் தரம் ஐந்துடன் தனது பாடசாலை கல்வியை இடைநிறுத்திக்கொண்டார்.

அந்நிலையிலும் அவற்றை எல்லாம் தாண்டி அவர் ஊடக துறையில் தனக்கென ஒரு இடத்தினை தக்க வைத்திருந்தார். சுயாதீன ஊடகவியலாளராக யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள், செய்திகள் எழுதி வந்ததுடன், உள்நாட்டு, வெளிநாட்டு இணையத்தளங்களுக்கும் செய்திகளையும் கட்டுரைகளையும் எழுதி வந்தார். அதேவேளை சில இணையத்தளங்களில் செய்தி பதிவேற்றுனராகவும் கடமையாற்றி வந்தார்.
இந்நிலையிலேயே கடந்த 2021 செப்டம்பர் 2ம் திகதி கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தார்.

யாழ் ஊடக அமையத் தலைவர் செல்வகுமார் தலைமையில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் பிரகாஷின் குடும்பத்தினர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் சுயாதீன ஊடகவியலாளர் பிரகாஷின் குடும்பத்தினரால் ஊடகவியலாளர்களுக்கான மருத்துவ உதவித் திட்டம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டதோடு முதற்கட்டமாக ஒரு லட்சம் ரூபா நிதி ஊடக அமையத்திடம் வழங்கி வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin